மருதம்

 மருதம் என்பது வயல், வயல் சார்ந்த இடமும் ஆகும். உதாரணமாக, தஞ்சாவூர் அருகே உள்ள வயல் சூழ்ந்த இடங்கள் மருதநிலம் ஆகும். மருதநில மக்கள் வணங்கிய தெய்வம் இந்திரன் ஆவார். இங்கு வாழ்ந்த மக்களை "உழவர்" என்று கூறுவர். இவர்களது தொழில் "நெல்லரிதல், களை பறித்தல்" ஆகியன. செந்நெல், வெண்னெல் ஆகியன இவர்களின் உணவுகள். காஞ்சி, மருதம் ஆகியவை மருதநிலத்தில் வளரும் மரங்கள். செங்கழுநீர், தாமரை ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். நாரை, நீர்க்கோழி, அன்னம், எருமை, நீர்நாய் ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்