தமிழகத் தொல்லியல்
கழகத்தின் 23 ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் ஆவணம் இதழ் 24 வெளியிட்டு விழா ஆகியவை 2013 ஜூலை மாதம் 21,22 சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் விழுப்புரம் கே கே கே சி பீ திருமண
மண்டபத்தில் நடைப்பெற்றதுநான்கு நாட்கள் இலவச கல்வெட்டு மற்றும் தொல்லியல் அறிமுக
வகுப்புகளும் , பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வெள்ளிக் கிழமை அன்று கீழ்வாலை மண்டகப்பட்டு ஆமாத்தூர் பனைமலை போன்ற இடங்களுக்கு சுற்றலாவுக்கு அழைத்துசென்றார்கள் மங்கையர்கரசி வீரராகவன்
அவர்கள்.ஞாயிறு கிழமை காலை எண்ணாயிரம், பிரம்மதேசம், எசலாம், சிந்தமணி நல்லூர்
அனைத்து தொல்லியல் அறிஞர்களுடன் சுற்றுலா சென்றது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இராஜேந்திர சோழனுடைய செப்பேடுகள்
சமீபத்தில் தென் ஆற்காடு மாவட்டம் விழுப்புரம்
வட்டம் ஏசாலம் என்ற கிராமத்தில் கிடைத்தமை அனைவரும் அறிந்ததே. இந்த ஏசாலம் என்ற கிராமத்திற்கு அருகில் எண்ணாயிரம் என்ற
ஊர் உள்ளது. தமிழ்ப் புலவர்களில் சிறப்பு வாய்ந்த காளமேகப் புலவர் இந்த
எண்ணாயிரம் கிராமத்தில் பிறந்தவர் என காஞ்சீபுரம் காமாட்சி அம்மன்
கோயில் கோபுரத்தில் உள்ள ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த
எண்ணாயிரம் என்ற கிராமத்தில் இராஜராஜன் காலத்தில் ஒரு
பெரிய கோயில் எடுக்கப்பட்டிருந்தது. இப்பகுதியையே இராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்று இராஜராஜன் பெயரிட்டிருந்தான். இராஜேந்திரசோழன் இங்கு ஒரு பெரிய கல்லூரியை நிறுவி அங்கு வேதம் இலக்கணம்
சாத்திரங்களை முறையாகப் படிக்க வழி வகை செய்திருந்தான். ஏசாலம்
கிராமத்திற்கு அருகில் பிரம்மதேசம் என்ற ஊர் உள்ளது. அங்கும்
சோழர் காலத்துக் கோயில்கள் இருக்கின்றன.
எண்ணாயிரம் ஏசாலம் பிரம்மதேசம் ஆகிய இந்தப் பகுதிகள் முழுவதுமே சோழர் காலத்தில் மிகச் சிறந்த பகுதியாகத் திகழ்ந்திருக்கின்றன.
இச்சிறப்பு வாய்ந்த பகுதியில்
சிவபெருமானுக்கு திருஇராமேச்வரம் என்ற பெயரில் ஒரு
கோயிலை இராஜேந்திர சோழனுடைய இராஜகுரு சர்வசிவபண்டிதர் என்பவர் கட்டினார். இக்கோயிலுக்கு இராஜேந்திரசோழன் ஒரு ஊரை தானமாக
அளித்துள்ளான். இந்த தானத்தை இராஜேந்திர சோழன் காஞ்சீபுரத்தில் தன்னுடைய
அரண்மனையில் குளிக்கும் மாளிகயில் இருந்த போது தானம் செய்தான் என்று
அறிகிறோம். இதனைக் குறிக்கும் செப்பேடுதான் இப்போது ஏசாலம் கிராமத்தில்
இராமேச்வரம் கோயிலில் உள்ள பிராகாரத்தில் பூமிக்கடியில்
இருந்து கிடைத்தது.
"நாட்டோமுக்கு பிரசாதஞ் செய்தருளிவர நாட்டோமும் திருமுகம்
கண்டு எழுந்து எதிர் சென்று தொழுது வாங்கி தலைமேல் கொண்டு எல்லை
தெரித்துக் காட்டி பிடிசூழ்ந்து பிடாகை நடந்தது கல்லும் கள்ளியும் நாட்டி
அறவோலை செய்தோம்" என்று ஏசாலம் நாட்டு மக்கள் அரசனின்
ஆணையை மரியாதையாக எதிர் சென்று தொழுது பெற்று தலைமேல்
கொண்டு வலம் வந்தனர். யானை மேல் ஏறி, கொடி ஒன்று கையில் ஏந்தி புதியதாக வகுக்கப்பட்ட ஊரை வலம்
வந்து அவ்வூருக்கு எல்லையை வகுத்து, எல்லயைக்
குறிக்க எல்லைக் கற்களையும், பால் கள்ளிகளையும் எல்லைகளாக நட்டனர் என்பதையும் இதனால் அறிகிறோம்.
குறிக்க எல்லைக் கற்களையும், பால் கள்ளிகளையும் எல்லைகளாக நட்டனர் என்பதையும் இதனால் அறிகிறோம்.
தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி அவர்கள் எசாலம் பற்றிய காணொளி தொகுப்பை காண இங்கே சொடுக்கவும்.
1 கருத்துகள்
நன்றி
பதிலளிநீக்கு